தலவரலாறு:

இத்திருக்கோயில் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்.

சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும்போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து உதிரம் கசிய அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட்ட, உடன் மன்னர் இத்திருக்கோயிலினை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. இத்திருக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம் ஆகும். முருகன் தன் வேலினால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் என்ற பெயருடன் திருக்குளம் ஒன்று கோயிலின் முகப்பில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூர் முருகன் சன்னதி ஆகும்.

கல்வெட்டுக்கள்: ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரகத்தின் சுற்றுச்சுவரில் 20 கல்வெட்டுக்கள் (1937, 138-157) உள்ளன.

கலைகள் மற்றும் கட்டிடக்கலை: இத்திருக்கோயிலின் கல் தூண்கள் மற்றும் கற்சுவர்களில் அமைக்கப்பெற்ற கலைகள் மற்றும் கட்டிடக்கலைகள் அனைத்தும் சோழமன்னர்களால் உயிர் உள்ளவன போல அமைக்கப்பெற்றுள்ளது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

தேர்கள் : சிறிய சட்டத்தேர் ஒன்று மட்டும் உள்ளது. வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று இத்தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

மண்டபங்கள்: வசந்த மண்டபம், தியான மண்டபம், முன்மண்டபங்கள் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதி மாடி மண்டபம் ஆகியவை உள்ளன.

தல விருட்சம் வன்னிமரம்
தல விருட்சம் வன்னிமரம்
 

 நடராஜர் - பார்வதி
நடராஜர் - பார்வதி